HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Tuesday, January 11, 2011

எனது வேதனை எழுத்துக்கள்....

Monday, 27 April 2009 at 13:32 | Edit note | Delete

உணர்வுகள் இன்று கண்ணீராகவே
கன்னம் வழியாக கடந்து போகிறது...

இணையச் செய்திகள் பார்த்து பார்த்து
துடிக்குது உள்ளம்...பின்னர் படிப்பது எங்கே...

நூலகத்தின் அமைதியிலும்
அடுத்த பக்கத்துக்கு நகரவில்லை
ஆதே பக்கத்திலே தங்கி இருக்கிறது பார்வை
உள்ளம் மட்டும் தாய்மண்ணில்
தள்ளாடித் தள்ளாடித் தேடுகிறது உறவுகளை...

உள்ளத்தில் உறைந்த உறவுகளை
காலத்தால் தொலைத்து விட்டு
கண்ணீரால் தேடுகிறேன்-இங்கு
நான் மட்டும் விதிவிலக்கல்ல
உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும்
தேடிக் கொண்டுதான் இருக்கிறான்
நண்பனையாவது...

வானம் எமக்கு மழையாகத்
தண்ணீரை தூவினாலும்-அது
மனதளவில் தமிழர்க்கு கண்ணீர்தான்..
பூக்கள் நம்மூரில் பூத்துக்குலுங்கினாலும் -அது
ஈற்றில் தமிழர்க்கு மலர்வளையம் தான்...
இயற்கையின் அழகான அர்த்தங்கள் கூட 

மாரிப்போகிறதே தாய்மண்ணில்....

யாழ் சங்கர்

1 comment: