HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Tuesday, January 11, 2011

அர்த்தமுள்ள கண்ணீர்த்துளிகள்...!

அர்த்தமுள்ள கண்ணீர்த்துளிகள்...!

தங்கை மகிழ்ந்தாள்!
தம்பியும் மகிழ்ந்தான்!
முற்றத்து மரத்தில் ஒரு குருவிக்கூடு.

அருகில் சென்றால் அமைதி காப்பாள்
அடைகாக்கும் குருவி பறந்தாலுமென்று.

மழை பெய்தாலும் ஓடி
மரம் நோக்கிப் பார்ப்பாள்
மழையால் ஏதும் நடந்தாலுமென்று .

விளையாடுவதுகூட
தவிர்த்தாள் நிணலில்!
வீட்டார் சத்தம்
எதிர்த்தாள் அருகில்!

பதுங்கு குழியில்
நாங்கள் பதுங்கிய போதும்,
குருவிக் குஞ்சுகள் பற்றியே
பதறுவாள் தங்கை.

புயல் காற்றில் கூட
சரியவில்லை.
இடி மழையில் கூட
கலங்கவில்லை.

குண்டு மழையில்
கூடு எரிந்தது.
குஞ்சுகள் கருகி
தரையி விழுந்த்தது.

இறுதித் துடிப்பில்
என்ன நினைத்தது
என்று எனது
உள்ளம் துடித்தது.

சுயநலமாய்....
ஆஸ்த்தியை நினைத்து அம்மாவும்
அந்தஸ்த்தை நினைத்து அப்பாவும்
எதை எதையோ நினைத்து
அழுது புலம்பியது உறவுகள்.

ஆனால்...
இரத்தமுள்ள குஞ்சுகள்
தங்கை கைகளில்.
அர்த்தமுள்ள கண்ணீர்த்துளிகள்
அவள் கண்களில்! கண்களில் மட்டுமே....!

2009.03
''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்

2 comments: