புலம்பெயர்ந்த புறாக்களே!
உலகப் படத்தில்
உங்கள் கூடுகள்!
உடைந்தது இங்கே
உங்கள் வீடுகள்!
கடந்தது கடல்கள்
உங்கள் சிறகுகள்!
தவிக்குது இங்கே
உங்கள் உறவுகள்!
வெளிநாட்டில் இருந்தாலும்
வெள்ளையன்போல் வாழ்ந்தாலும்
தாய்நாட்டில் கொண்டகாதல்
மாறவில்லை இன்றுவரை!
மறந்திடுமா....?
வீட்டில் தம்பியோடு
விளையாடிய நாய்க்குட்டி!
கூட்டில் தங்கையோடு
கதைபாடிய கிளிக்குஞ்சு!
ஆட்டுக் குட்டியை
அனைத்த புகைப்படம்!
கனவிலே அணையா
இரவுப் புத்தகம்!
ஓலை வேலிக்குள்
ஒழிந்த ஓணான்கள்!
மழையே இன்றி
அழிந்த காளான்கள்!
சேற்றில் இருந்தாலும்
சிரித்த தாமரை!
ஆற்றில் கவிழ்ந்த
கடதாசிப் படகுகள்!
இன்று...
சொந்த ஊருக்கே
சுற்றுலா பயணிபோல்!
வந்து போகிறீர்
NICE POEM. KEEP IT UP
ReplyDelete