HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Thursday, February 17, 2011

யார் இவர்கள்? துரோகிகள்..

i got this pic from this page...




யார் இவர்கள்? துரோகிகள்...

விடுதலையை விருப்பாதவர்கள்-அதை
விலைபேசி விற்றவர்கள்!

விடுதலைவந்துவிட்டால்-பின்னர்
அவர்கள் செல்லாக் காசுகள்.
எதிரணியிலிருந்தாலும் வெத்து
வேட்டுக்கள்!

எச்சில் எலும்புக்காய்-குறைக்கும்
விசுவாச வீரர்கள்!
வரலாறு வாழுமென்பதை மறந்த
எட்டப்ப புத்திரர்கள்!

வாழ்வாங்கு வாழ்ந்தாலும்
வாழும்போதே இறந்தவர்கள்!

தன் சகோதரனால் சட்டை கிளிந்ததுன்று!
தன் தாயின்(ஈழம்) சேலையை உரிந்தவர்கள்!

தனிப்பட்ட இழப்புக்காய்
தாய்மண்ணை இகழ்பவர்கள்!

இரண்டாம்முறை யேசுவந்தாலும்
இவர்களையினி மன்னிப்பாரா ?

கதிர்காமருக்கு சிங்களம்
சிலைவைக்கவில்லை-அவரொரு
தேசத்தியாகி என்று!

ஆனால் ஈழம் இவர்கட்கு
சிலைவைக்கும்-இவர்களொரு
தேசத்துரோகிகள் என்று!

ஒன்றுமட்டும் உண்மை...

இரண்டாயிரமாண்டுகள்
தாண்டியும் இன்னும்-யூதாஸ்
யூதருக்கு துரோகிதான்.
அட..
இரண்டு கோடியாண்டுகளானாலும் 
நீங்கள் தமிழர்க்கு துரோகிகள்தான்-என்று
நீங்கள் விரோதிகள்தான்!

''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்




Monday, February 14, 2011

அழகான அந்த நாட்கள்...




அழகான அந்த நாட்கள்...விடுதி வாழ்க்கை....

பத்துவருடங்கள் தாண்டிய-அந்த
பாச வாழ்க்கையைப் பதிய-இந்த
பக்கங்கள் போதாது...
சொல்லியும் தீராது...

சித்தமிருந்தால் மீண்டும்
நித்தம் பிறப்போம்.
பிரிவு தந்த-அந்த
சோகம் திறப்போம்

ஆண்டு கடந்த போதும்-அன்பு
மாண்டு போகவில்லை.
நாடு கடந்த போதும்-நட்பு
நழுவிப் போகவில்லை.

திசைகள் வேறாய்ப் பிரிந்துவிட்டோம்
திக்குத் திக்கை சிதறிவிட்டோம்-அரசு
சிறையிலெம்மை   இட்டபோதும்
நாம் சிறிதும்கூடக்  கலங்கவில்லை.

பழைய-புதுக் கொஸ்ரலென்று-எம்முள்
பட்டாசுச் சண்டைவரும்.
வட-தென்கொரியா மோதல்போல்
அணுகுண்டுச் சத்தம்வரும்.

ஒரு பாசல் கொண்டுவந்தால்
ஒன்பதுபேர் கைபோட்டு-வரும்
ஒருபிடி சோறினன்பு
இனிமேல்த்தான் எப்போதோ?

ஒருவன் சொந்தபந்தம் பார்ர்கவந்தால்.
இரவில் கபெட்டைக் காலிசெய்வோம்.
பணமேதும் தொட்டதில்லை-ஆனால்
பலகாரம் விட்டதில்லை!

பரிட்சைக் காலங்களில்
படிக்கும் இரவுகளில்-நம்
இடைவேளை என்பதே
இளனி பறிப்பதுதான்.

ஒருநாள்..
தென்னைமேலே நான்.
கிழே தியாகராஜா(uncle),
நண்பர்கள் ஓடிஒளிந்து விட்டார்கள்-மேலே
நான்பட்ட பாடு நாய் படாப்பாடு.

இன்னுமொருநாள்...
திடீரென்று தியாகராஜா(uncle)
நாங்கள் ஒர்டிவிட்டோம்-நண்பன்
ஜெயந்தன் மாட்டிக் கொண்டான்.

பின்னர்..
தலையில் கோம்பையோடு-அவன்
வகுப்பு வகுப்பை வலம்வந்தான்
இன்று நினைத்தாலும்
வசிறு வலிக்கச்  சிரிப்புவரும்.

கொட்டும் மழையென்ன!
வேர்க்கும் வெயிலென்ன-நாம்
விளையாடத் தொடங்கிவிட்டால்
காலநிலை கணக்கிலில்லை.

மதில் பாய்ந்து செல்வோம்-ஒருநாள்
மாட்டிக் கொண்டோம்,
அதிபர் அடித்த அடிமட்டும்
இன்னும் நினைவிருக்கு.

அம்மா இல்லையென்ற-கவலை
அடிக்கடி வருவதில்லை.
கைலாசப் பிள்ளையம்மா
கடவுள் தந்த எங்களம்மா!

பள்ளியில் அதிபராய்
விடுதியில் அப்பாவாய்.
அடியும் விழுவதுண்டு
ஆறுதலும் அவரேதான்.

நட்ட நாடு ராத்திரியில்
நாம்தூங்கும் வேளையில்-தூக்கத்தில்
சிரிப்பான் ஒருவன்.
கதைப்பான் இன்னொருவன்

இப்படி நாம் அடிக்கடி
அதிர்ச்சி வைத்தியம் காண்பதுண்டு!

பாழடைந்த கிணற்றுக்குள்
பாய்ந்து நீச்சலடிப்பதுண்டு-ஒருநாள்
நாம் உள்ளாடையோடு ஓடிவிட்டோம்.
பிடிபட்ட ராதாவை-அதிபர்
பிரித்து மேந்துவிட்டார்..:-)

நாங்கள்வைத்த வாழைதென்னை
இன்றும் இருக்கிறது-அன்று
நாங்கள்வைத்த பூமரமும்
இன்றும் பூக்கிறது.

பேக்கரிப் பாண்-சுடச்சுட
முட்டைரொட்டி
பத்துரூபாய்க் கறியோடு
பகிர்ந்துண்டது நினைவிருக்கு.

பட்டப் பெயர்கள்
எமக்குள்ளிருந்தது.
அமைச்சர் பதவிகளும்
எமக்குள்ளிருந்த்தது.

(தொலைத்தொடர்பு சேவைகள் அமைச்சர்-சிவகரன்.
மின்சார சேவைகள் அமைச்சர்-பாரத்.
பறவை விலங்கு வளர்ப்பு அமைச்சர்-ஜெயந்தன்.
ஒழுக்க சீர்கேடு அமைச்சர்- பத்மா.
சிறுவர் நலன்கள் அமைச்சர்- நவநீஷ்.
மருத்துவ சுகாதார அமைச்சர்- மதி
மகளீர் விவகார அமைச்சர்- கேசவன்.
அரசியல் விவகார அமைச்சர்- நான்
உள்விவகார அமைச்சர்-சிவபாலன்.
தோட்ட உட்க்கட்டமைப்பு அமைச்சர்-கோனேஸ்.
சாப்பாட்டு விவகார அமைச்சர்-சஞ்சீவ்.
முஸ்லிம் கலாச்சார அமைச்சர்-ராகுலன்.
வெளிவிவகார அமைச்சர்-ராஜீவ்)

ஒவ்வொரு பதவிக்கும்-உள்ளே
ஆழமான அர்த்தமுண்டு :-).
வெளியே சொன்னால்-எனை
வெட்டிப் போடுவார்கள்:-))))))

''என்ன தியாகராஜா
மாடு புல்லு மேயிதில்லை''-என
ஐயர் சொன்ன அந்த வார்த்தை
இன்னும் நினைவிருக்கு.

எம்மைவிட எங்கள்
தம்பிமார் வீரர்கள்
விளையாட்டுப் போட்டியிலே
வென்றுவரும் சூரர்கள்.

ஆயிரம் சண்டைகள்
எமக்குள் இருந்தாலும்
தம்பியைத் தொட்டவனை
என்றுமே விட்டதில்லை.

அடித்தாலும் பிடித்தாலும்-எமை
பாசத்தோடு படிப்பித்த அண்ணன்மார்-நாம்
இன்று பட்டம்வரை சென்றதற்கு
அவர்கள்தான் அடித்தளம்!

அன்று..
சொந்த அண்ணன் தம்பிபோல
சிரிப்போடு சேர்ந்திருந்தோம்
இன்று...
தனிமையால் தனிமரமாய்
நகருகிறது என்நாட்கள்.

என்னதான் படித்தாலும்!
எவ்வளவுதான் உழைத்தாலும்!
எங்குதான் வாழ்ந்தாலும்-அந்த
அழகான நாட்க்கள்போலே
இனிமேலில்லை! இல்லை! இல்லையே!  :-((((((((((((((((((((((((((


''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்

Thursday, February 3, 2011

பள்ளிப் பருவத்தில்...

பள்ளிப் பருவத்தில்...

கேள்வி மேல கேள்வி கேட்டு
எருமையெனத் திட்டினாலும்

முன்னே கூப்பிடு
முட்டுக் காலில் நிறுத்தினாலும்,

கடைசி வாங்கை  மட்டும்-நாம்
கடைசிவரை விட்டதில்லை .

தனித்தனியே பிரித்து
தள்ளித் தள்ளி இருத்தினாலும்.

அடுத்தபாடத்தில் சேர்ந்திருக்க
ஆவலோடு காத்திருந்தோம்.

பள்ளியால் வரும் வழியில்
பட்டப்பகல் நடுவெயிலில்

சாலையோர மாங்காய்க்கு
சளைக்காமல் எரிந்(த)துண்டு.

ஓட்டில் கல் விழுந்துவிட்டால்
ஓடிய ஓட்டம் ஒலிம்பிக்கிலும் இல்லை.

கரும்பலகை சுவர்களில்
காட்டூன்கள் வரைந்து வைத்தோம்.

வகுப்பறைக் கதிரைகளில்-எம்
பெயர்கள்  செதுக்கி வைத்தோம்.

''நடராஜ்'' கொம்பாசுள்ளே-சாமிப்
படங்கள் ஒட்டிவைத்தோம்.

ஆங்கில வாத்தி வேண்டாமென்று
அப்பப்போ நேர்ந்து கொண்டோம்.

லுமாலா சைக்கிளோட
கிரவல் சாலைகள் கிடங்காகும்
நீலக்காற்சட்டை நிறம் மாறும்.

தொடரும்...

''வாழ்க எம் தேசம்''

யாழ் சங்கர்-கவிதைகள்