HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Saturday, September 3, 2011

செங்கொடி ...!





செங்கொடி ...!

சீராய் வளர்த்த
பெற்றோரை மறந்தாய்.

சிலபெண்கள் விரும்பும்
சிற்றின்பம் வெறுத்தாய்!

மாறாய்த் தமிழனின்
மானம் சுமந்தாய்!

மரணத்தை வரவேற்று
தீயாய் எரிந்தாய்!

எங்கோ பிறந்தாய்
என்னினம் நேசித்தாய்!

எமக்காய் எரிந்தாய்
இன்னொரு தாய்தான்!

என்னினம் நேசித்தாய்
எனக்கும் நீ தோழிதான்!

என்னினம் நேசிக்கும்
ஒவொரு தமிழனும்!
இதயம் கனத்தனர்
கண்ணீர் வடித்தனர்!

''தோழர் செங்கொடி''- என்ற உன்
கடைசி கையொப்பம்
என்றும் இதயத்தில் ஆறாத
காயமடி...!

No comments:

Post a Comment