காத்திரு நண்பனே...
கடவுளும் காலமும் இன்று
எம்பக்கம் திரும்பிக் கொண்டு இருக்கின்றது!
கலங்காதே கண்ணீர்மாற
கடந்துவந்த பாதையை
கடுகளவும் மறவாதே-எம்
விடுதலையின் மூலசக்தி அவைதான்!
நாங்கள் விதைத்த
இரத்தம்,சதைகள், கண்ணீர்
வீணாகிப் போயிடாது!
நாம் உண்டு உறங்கி
ஓடிவிளையாடிய தெருக்கள்!
எந்தையும் தாயும்-எமை
ஈன்றெடுத்த தேசம்!
தொலைதூரம் இல்லையட
தொட்டுவிட முடியாமல்!
மலைபோல எங்கள் உள்ளம்
திடமாக இருக்கட்டும்!
முள்ளி வாய்க்காலில்
முடிந்தது எங்கள் முடிவல்ல!
முள்ளி வாய்க்காலில்
முளைத்ததே எங்கள் விடிவு!
நாங்கள் அழிந்த வரலாறுகள்
அதிகமடா நண்பா-ஆயினும்
மீண்டும் எழுந்ததது அதிலும்
ஒன்று அதிகமடா!
தமிழீழம் பெற்றெடுத்த
ஒருதாயின் பிள்ளைகள் நாம்!
செத்தாலும் சாவோம்
விலைபோக மாட்டோம்!
நாங்கள் இருக்கின்றோம் -நண்பா
நாங்கள் இருக்கின்றோம்
உங்கள் குரலாக.
நீங்கள் இருக்கின்றீர்
எங்கள் உயிராக.
புலம்பெயர்ந்து விட்டோமடா-அன்றி
வெள்ளையனில்லை நீங்கள்தான்
எங்கள் உறவுகளடா
நீங்கள்தான் எங்கள் உயிர்களடா!
நீங்கள்தான் நீங்களேதான்!
No comments:
Post a Comment