HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Thursday, June 16, 2011

காத்திரு நண்பனே...



காத்திரு நண்பனே...
கடவுளும் காலமும் இன்று
எம்பக்கம் திரும்பிக் கொண்டு இருக்கின்றது!

கலங்காதே கண்ணீர்மாற
கடந்துவந்த பாதையை
கடுகளவும் மறவாதே-எம்
விடுதலையின் மூலசக்தி அவைதான்!

நாங்கள் விதைத்த
இரத்தம்,சதைகள், கண்ணீர்
வீணாகிப் போயிடாது!

நாம் உண்டு உறங்கி
ஓடிவிளையாடிய தெருக்கள்!
எந்தையும் தாயும்-எமை
ஈன்றெடுத்த தேசம்!

தொலைதூரம் இல்லையட
தொட்டுவிட முடியாமல்!
மலைபோல எங்கள் உள்ளம்
திடமாக இருக்கட்டும்!

முள்ளி வாய்க்காலில்
முடிந்தது எங்கள் முடிவல்ல!
முள்ளி வாய்க்காலில்
முளைத்ததே எங்கள் விடிவு!

நாங்கள் அழிந்த வரலாறுகள்
அதிகமடா நண்பா-ஆயினும்
மீண்டும் எழுந்ததது அதிலும்
ஒன்று அதிகமடா!

தமிழீழம் பெற்றெடுத்த
ஒருதாயின் பிள்ளைகள் நாம்!
செத்தாலும் சாவோம்
விலைபோக மாட்டோம்!


நாங்கள் இருக்கின்றோம் -நண்பா
நாங்கள் இருக்கின்றோம்
உங்கள் குரலாக.
நீங்கள் இருக்கின்றீர்
எங்கள் உயிராக.

புலம்பெயர்ந்து விட்டோமடா-அன்றி
வெள்ளையனில்லை நீங்கள்தான்
எங்கள் உறவுகளடா
நீங்கள்தான் எங்கள் உயிர்களடா!
நீங்கள்தான் நீங்களேதான்!

No comments:

Post a Comment