HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Wednesday, January 12, 2011

அந்த அதிகாலையில்!

அதிகாலைப் பூக்கள்-அன்று
இறைவனுக்காக காத்திருந்தது!

அந்த அதிகாலையில்!
அயலவர்களின் சேவல்
அலாரமாக வானம் வரை எட்டியது

சிலவீட்டு முற்றங்கள்
நீர்தெளித்துக் கூட்டப்பட்டது
கோலம் போடுவதர்காய்!

முணுமுணுத்த பாட்டோடு
மாட்டு வண்டிகள்
தோட்டங்கள் நோக்கி நகரும் சத்தம்
தலையணைக்குள் தலைபுத்தைத்தும்
கேட்டுக் கொண்டே இருந்தது!

பள்ளிக்கு நாம் தயாராகையில்
பாணுக்கு பச்சைமிளகாய் சம்பல்
பாசத்தோடு பரிமாறத் தயாராகும் அம்மா.

வீட்டில் மொத்த உறுப்பினர்கள்
முப்பதிர்ற்கும் மேல்!
எழு மனிதர்கள்-மீதி
விலங்குகளும் பறவைகளும்.
இதற்க்கெல்லாம் தல-தளபதி  அப்பாதான்.

அம்மா கொடுத்த தேநீர்ச்சூடு
ஆறிப்போனாலும்
பத்திரிகையின் சூடு ஆறுமுன்
படித்துமுடிக்கும் அம்மப்பா!

காக்கை வாயிலுள்ள வடை
வீழாதா எனப்பார்த்த நரிபோல்!
தாத்தா கையிலுள்ள பத்திரிகைக்காய்
பார்த்திருக்கும் அம்மம்மா!

எங்கள் கிணற்றுக்கு வந்தவர்கள்.
கண்டங்கள் தாண்டும்வரை
கத்திச் சொல்வார்கள்-அன்று
இரவு நடந்த விடுப்பு விண்ணான செய்திகளை !

மாசத்து முப்பது நாளும்
சைக்கிளையே சுற்றிச் சுற்றி
சரிசெய்யும் தம்பி...!

கண்ணாடிக்கே களைக்கும் வரை
சரிபார்த்து.
பக்கத்து தோழிக்கும் சேர்த்து
பாசல் செய்யும் அக்கா!

கதவு உடையும் வரை தட்டினாலும்
கட்டிலிலோ அல்லது களிவறையிலோ
தூங்கிக் கொண்டிப்பேன் நான்....! I'm Paavam''

No comments:

Post a Comment