காலத்திடமே பதில்!
...................................
எது உண்மை?
எது பொய்மை?
எதுவுமே புரியவில்லை....!
எது காதல்!
எது ஈர்ப்பு!
அதுவும் எனக்கு புரியவில்லை....!
உண்மைக் காதல் ஒருமுறை என்றார்கள்-அது
அது முதலா?இடையிலா?முடிவிலா?
இதற்க்கு யாரிடமும் பதிலில்லை...!
ஒரு இதயம் வென்றவனுக்கு-அதுதான்
உண்மை! உயிர்! வாழ்க்கை...
பல இதயம் பார்த்தவனுக்கு-எதுதான்?
உண்மை! உயிர்! வாழ்க்கை...???
காரணம்...
பல இதயம் பார்த்தவன் பகுத்தறிவான்-ஆனால்
ஒரு இதயம் பார்த்தவன் என்ன செய்வான்???
வெளிப்படியாக சிலர்...
இதுதான் முதல் காதல் எனச்சொல்ல
முயற்சிப்பதில்லை-அனால்
இதுதான் கடைசிக் காதல் எனச்சொல்லவும்
முடிவதுமில்லை...! ஏன்?
அனால் அந்த நொடிகளின்
அன்பு! தவிப்பு! கண்ணீர்!பரிசம்!பார்வை!..etc
உண்மையானவை...
அதுதான் உண்மை!
இதை மனச்சாட்சி உள்ள எவரும்
மறுதலிக்க மாட்டார்கள்...
பறவைகள் அப்படி இல்லை...
மிருகங்களும் அப்படி இல்லை-ஏன்
மனிதன் மட்டும் இப்படி?
பறவைகள்!
பறவையாக வாழுகிறது!
மிருகங்கள்!
மிருகங்களாக வாழுகிறது!
மனிதன்????????????????
எவர்கையிளுமில்லை பதில்!
இதற்க்கு காலத்திடமே பதில்...
யாழ் சங்கர்
(தொடரும்)
This comment has been removed by the author.
ReplyDelete