Sunday, 26 April 2009 at 13:45 | Edit note | Delete
கடலில் எறிந்த்தாலும்
வெற்றுத் தரையில் துயின்றாலும்
பதவி பத்துத் தந்தாலும்
கொண்ட கொள்கை மாறாது
மானமுள்ள தமிழர்க்கு ...
இரத்தம் படிந்த ஆடைகள்
கண்ணீர் வடிந்த முகங்கள்!
கூடுகள் இல்லா பறவைகள் நாம்
கூரைகள் இல்லாத வீடுகளாய்
காடுகள் சேர்ந்தோம் மிருகங்களாய்...
அகதிகளானோம் அடிமைகளாய்...
காலம் ஒருநாள் மாறும்-எம்
கண்ணீரும் ஒருநாள் தீரும்
வானம் மெதுவாய் தூவும்
எம் தேசமெங்கும்
விடுதலை பூக்கும் ...
.யாழ் சங்கர்
This comment has been removed by the author.
ReplyDelete