i got this pic from this page...
யார் இவர்கள்? துரோகிகள்...
விடுதலையை விருப்பாதவர்கள்-அதை
விலைபேசி விற்றவர்கள்!
விடுதலைவந்துவிட்டால்-பின்னர்
அவர்கள் செல்லாக் காசுகள்.
எதிரணியிலிருந்தாலும் வெத்து
வேட்டுக்கள்!
எச்சில் எலும்புக்காய்-குறைக்கும்
விசுவாச வீரர்கள்!
வரலாறு வாழுமென்பதை மறந்த
எட்டப்ப புத்திரர்கள்!
வாழ்வாங்கு வாழ்ந்தாலும்
வாழும்போதே இறந்தவர்கள்!
தன் சகோதரனால் சட்டை கிளிந்ததுன்று!
தன் தாயின்(ஈழம்) சேலையை உரிந்தவர்கள்!
தனிப்பட்ட இழப்புக்காய்
தாய்மண்ணை இகழ்பவர்கள்!
இரண்டாம்முறை யேசுவந்தாலும்
இவர்களையினி மன்னிப்பாரா ?
கதிர்காமருக்கு சிங்களம்
சிலைவைக்கவில்லை-அவரொரு
தேசத்தியாகி என்று!
ஆனால் ஈழம் இவர்கட்கு
சிலைவைக்கும்-இவர்களொரு
தேசத்துரோகிகள் என்று!
ஒன்றுமட்டும் உண்மை...
இரண்டாயிரமாண்டுகள்
தாண்டியும் இன்னும்-யூதாஸ்
யூதருக்கு துரோகிதான்.
அட..
இரண்டு கோடியாண்டுகளானாலும்
நீங்கள் தமிழர்க்கு துரோகிகள்தான்-என்று
நீங்கள் விரோதிகள்தான்!
''வாழ்க எம் தேசம்''
you are invited to follow my blog
ReplyDeleteஅருமை சங்கர்
ReplyDeletethanx dude...)
ReplyDeleteThere must be an answer for everything..!..
ReplyDeleteMay god please give a relief, they r just asking atleast for peace ..!!