தமிழின உணர்வுகளை
உள்ளக் கிடக்கையில் புதைத்துவிட்டு.
நடைபிணமான எனது நண்பனே
ஒருநாள் வெடிக்கும்
அன்று நீ பேசு -கையில்
கிடைப்பதை விசு!
ஒன்றும் முடியவில்லை என்று
உணர்வுகளை அடக்கி அழுதிடும் நண்பனே.
ஒரு காலம் வரும் வந்தே தீரும்
கலங்கிடாதே அதை மறந்திடாதே.
ஆயுதங்கள் மௌனித்தோம்-தவிர
அடங்கிவிடவில்லை!
அமைதி காக்கிறோம்-தவிர
பயந்துவிடவில்லை!
எங்கள் உணர்வுகள் பெரிது
எங்கள் கனவுகள் பெரிது
ஒருநாள் வரும்
வந்தே தீரும்..
ஆம் ஒரு நாள் வந்தே தீரும்.
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே
thank you bro.
ReplyDeleteவந்தே தீரும்...நம்பிக்கையுடன் இருங்கள்....
ReplyDelete