அன்பான தமிழ் உறவுகளே உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். EVERYTHING BCZ OF MY GOD, NOTHING BCZ OF ME...
HELLO WELCOME U ALL...
தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT
Tuesday, January 11, 2011
எதுவும் எமக்கு புதிதல்ல! இதுவே எமக்கு முடிவல்ல!
அழகான அந்த அதிகாலைகள்
அழிந்ததுவேனோ உண்மைதான்-ஆனால்
இல்லாமல் போகவில்லை....
அகதியாக! அனாதையாக!-அந்நியரால்
ஆக்கப்பட்டதும் உண்மைதான்
ஆனால் உறுதி இன்னும் இருக்கிறது....
அதீதமாய் நேசித்த தாய்மண்ணை
துப்பாக்கி முனக்களுக்குளும்!
சப்பாத்துக் கால்களுக்குள்ளும்!
பறிகொடுத்தது உண்மைதான்-ஆனால்
அது அந்திக்காலம் ஆகாது....
ஊருக்கு வெளியேயும்!
நாட்டுக்கு வெளியேயும்! வாழ்ந்த போதும் -நம்
உறவுகள் எண்ணி அடிக்கடி அழுததும்!
இணையச்செய்திகள் பார்த்து பதறி பதறி
இதயம் கனத்ததுவும்.....
கொன்றனர்! வென்றனர்! -என்று
ஆணவத்தின் உச்சியில் அந்நியர் ஆடிய போதும்!
கூச்சலிட்டு கேலிசெய்த போதும்- அது
இருக்காது! எதுவும் நடந்த்திர்க்காது-என
நம்மை நாமே தேற்றிக் கொண்டதுவும்....
எல்லாம் உண்மையாக போகட்டும்
பரவாயில்லை! பரவாயில்லை!.... ஆனால்
ஒன்று மட்டும் உண்மை மானத் தமிழனுக்கு
எதுவும் எமக்கு புதிதல்ல!
இதுவே எமக்கு முடிவல்ல!....
யாழ் சங்கர் Saturday, 12 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
உங்க கவிதை மனசை ஏதோ செய்யுது சார்..
ReplyDeleteநம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....